மலையகத்தை மையப்புள்ளியாக கொண்டு செயற்படும் முக்கியமான சில சிவில் அமைப்புகள், சம்பிக்க ரணவக்க தலைமையிலான 43 ஆம் படையணிக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன.
இது தொடர்பான ஆரம்பக்கட்ட பேச்சுகள் இடம்பெற்றுள்ளன எனவும், விரைவில் இது சம்பந்தமாக இறுதி முடிவு எட்டப்படலாம் எனவும் தெரியவருகின்றது.
சம்பிக்கவின் கட்சியில் இணையாது, அவர் தலைமையில் அமையும் கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுவருகின்றது.
தென்னிலங்கையில் உள்ள முக்கியமான சில சிவில் அமைப்புகள், 43 ஆம் படையணிக்கு ஆதரவை வெளியிட்டுள்ளன.
#SriLankaNews