UNP
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணிலுக்குத் தோள்கொடுக்க எம்.பிக்களாகும் ஐ.தே.க. உறுப்பினர்கள்?

Share

ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த சிலர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்கவுள்ளனர் என்று கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமராகப் பதவியேற்றுள்ள தமது கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு உதவியாக இவர்கள் நாடாளுமன்றம் செல்லவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களை நாடாளுமன்றம் அனுப்புவதற்காக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் 6 பேர் பதவி விலகச் செய்வதற்காக தற்போது அவர்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருகின்றன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி அவர்கள் பதவி விலக இணங்கும் பட்சத்தில் தேசியப்பட்டியல் உறுப்பினர்களாக ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர்கள் எம்.பிக்களாகப் பதவியேற்பார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, மருந்து, உரம், எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய நான்கு குழுக்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 3
செய்திகள்இலங்கை

அயதுல்லா அலி கமேனியின் மறைவு: கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தில் அமைச்சர் விஜித ஹேரத் இரங்கல்!

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின்...

20 2
உலகம்செய்திகள்

மில்லியன் கணக்கான மக்கள் திரள்வர் என எதிர்பார்ப்பு: அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின்...

19 1
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்: ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு கடும் கண்டனம்!

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின்...

18 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் சரியானது: அமெரிக்க வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன் மாஸ்ட் அதிரடி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன்...