24 65ff9cac7568e
இலங்கைசெய்திகள்

மாபெரும் மக்கள் கூட்டத்தின் பங்கேற்புடன் ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டம்

Share

மாபெரும் மக்கள் கூட்டத்தின் பங்கேற்புடன் ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டம்

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டத்தை மருதானை சந்தியில் பிரமாண்டமாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் மே தினக் கூட்டம் நடைபெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின பேரணியை சுதந்திர சதுக்கத்தில் நடத்துவதற்கு முன்னர் ஆலோசிக்கப்பட்ட போதிலும், மருதானை மண்சந்தி டவர் ஹால் தியேட்டருக்கு அருகில் மே தினக் கூட்டத்தை நடத்துவது பொருத்தமானது என கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டத்தில் அமைப்பாளர்கள் தலா அறுபது பேருடன் மே தினக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்கிணங்க ஐக்கிய தேசியக் கட்சியானது மாபெரும் மக்கள் கூட்டத்தின் பங்கேற்புடன் மே தினத்தை நடத்தவுள்ளதாக பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...