images 4 6
இலங்கைஅரசியல்செய்திகள்

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 25,000 கிலோ கிராம் போஷணைப் பொருட்களை வழங்கியது யுனிசெப்!

Share

டிட்வா (Ditwa) சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் மந்தபோஷணை நிலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், யுனிசெப் (UNICEF) அமைப்பு பாரிய அளவிலான போஷணைப் பொருட்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதோடு, இலட்சக்கணக்கான மக்கள் தங்குமிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர். இந்தச் சூழலில், போதிய உணவு கிடைக்காத காரணத்தால் 6 மாதக் குழந்தைகள் முதல் 5 வயது வரையிலான சிறுவர்கள் மத்தியில் மந்தபோஷணை நிலை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரித்திருந்தனர்.

இதனைத் கருத்திற் கொண்டு, சிறுவர்களுக்கு அவசியமான BP-5 எனும் 25,000 கிலோகிராம் (25 மெற்றிக் தொன்) போஷணைப் பதார்த்தங்களை யுனிசெப் வழங்கியுள்ளது. கொழும்பிலுள்ள யுனிசெப் அலுவலக அதிகாரிகள், இந்தப் பொருட்களைச் சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தனர்.

இந்த உதவித் திட்டத்தின் மூலம் அனர்த்தப் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான சிறுவர்களின் போஷணைத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
ginger
இலங்கை

இஞ்சி செய்கையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

ஏற்றுமதி விவசாயத் திணைக்களம், இஞ்சி அழுகல் நோய் குறித்துக் கவனம் செலுத்துமாறு விவசாயிகளுக்கு அறிவித்துள்ளது. குறிப்பாக...

Valikamam Land Release
இலங்கை

காணிவிடுவிப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட ஈ.பி.டி.பி கட்சியின் உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு!

பலாலி காணி விடுவிப்பு போராட்டத்தில் கலந்துகொண்டமை தொடர்பில், ஈ.பி.டி.பி கட்சியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர்...

Colombo Hotel
இலங்கை

பட்டப்பகலில் நடத்தப்பட்ட கைவரிசை – போலி ஆசாமி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள்!

கடந்த 3 ஆம் திகதி, கொழும்பு – கம்பெனி வீதி பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு...

Cid Investigations 1
இலங்கை

கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரம் – தலையிடுகிறதா CID!

அண்மைய நாட்களாக மிகப்பெரிய அளவிலான பேசுபொருளாக காணப்பட்ட கல்முனை ஆதார வைத்தியசாலை முஸ்லிம் பெண்களினுடைய ஆடை...