rtjy 67 scaled
இலங்கைசெய்திகள்

பொலிஸ் அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும்

Share

பொலிஸ் அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும்

பாதாள குழுவினர் பொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுப்பதையிட்டு ஒட்டுமொத்த பொலிஸ் அதிகாரிகளும் வெட்கப்பட வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

தென்மாகாணத்தில் பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பாதாள குழுவினருடன் ஒரு சில பொலிஸ் அதிகாரிகள் நெருக்கமாக செயற்படுகிறார்கள் எனவும், இதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இனி மன்னிப்பு வழங்கப்படமாட்டாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

சிறந்த முறையில் சேவையாற்ற முடியாதவர்கள் தாராளமாக பதவி விலகலாம்.

பொலிஸ் நிலையங்களின் வளங்களை விரிவுப்படுத்துவதற்கு இயலுமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளேன். பல சலுகைகளை பெற்றுக் கொடுத்துள்ளேன்.

ஆனால் எதிர்பார்க்கப்பட்ட இலக்கை அடையவில்லை. பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட பிரதேசத்தில் ஏதேனும் சம்பவம் இடம்பெற்றால் அதற்கு உரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொறுப்புக் கூற வேண்டும்.

பொலிஸாரின் செயற்பாடுகள் இனி புலனாய்வு பிரிவுகள் ஊடாக கண்காணிக்கப்படும். பாதாள குழுவினர் பொலிஸாருக்கு தொலைபேசியில் அழைத்து அச்சுறுத்தல் விடுக்கிறார்கள்.

இந்த நிலைக்கு பொலிஸ் சேவை தள்ளப்பட்டுள்ளதற்கு ஒட்டுமொத்த பொலிஸாரும் வெட்கப்பட வேண்டும்.

பாதாள குழு மற்றும் போதைப்பொருள் ஒழிப்புக்கு எதிராக நான் கடுமையாக செயற்படுவதால் பாதாள குழுவினர் என்னை அமைச்சு பதவியில் இருந்து நீக்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

பாதாள குழுவினருடன் ஒருசில பொலிஸ் அதிகாரிகள் நெருங்கிய தொடர்பில் உள்ளார்கள். செய்யும் தொழிலின் கௌரவத்தை பாதுகாத்துக் கொள்ள அவ்வாறான செயற்பாடுகளை அவர்கள் இனி தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

சிறந்த முறையில் செயற்பட முடியாத பொலிஸார் தாராளமாக பதவி விலகலாம். நாட்டு மக்கள் பொலிஸ் சேவையை விமர்சிக்காமல் நம்பிக்கை கொள்ளும் நிலைமை தோற்றுவிக்கப்பட வேண்டும்.

பொலிஸாரின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே அனைவரும் பொறுப்புடன் நடந்துக் கொள்ள வேண்டும்” என்றார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...