tamilni 370 scaled
இலங்கைசெய்திகள்

ஆறு மாதங்களில் பாதாள உலக குழு முடிவுக்கு கொண்டு வரப்படும்

Share

ஆறு மாதங்களில் பாதாள உலக குழு முடிவுக்கு கொண்டு வரப்படும்

எதிர்வரும் ஆறு மாத காலத்திற்குள் பாதாள உலகக் குழு செயற்பாடுகளும் போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகளும் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த நாட்டையும் ஆக்கிரமித்துள்ள போதைப் பொருள் மற்றும் பாதாள உலகக் குழு செயற்பாடுகள் விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மக்கள் அமைதியான சூழ்நிலையில் வாழ்வதற்கான பின்னணி உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 17ஆம் திகதி யுக்திய என்னும் பெயரில் விசேட பொலிஸ் நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கை எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் தொடரும் என பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொலிஸாரும் இராணுவத்தினரும் கூட்டாக இணைந்து முன்னெடுத்த யுக்திய நடவடிக்கையின் ஊடாக இதுவரையில் 6583 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...