24 6639914dcf540
இலங்கைசெய்திகள்

ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ள மத்திய வங்கி: குற்றச்சாட்டு

Share

ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ள மத்திய வங்கி: குற்றச்சாட்டு

இலங்கை மத்திய வங்கியானது, தொடர்ச்சியாக இரண்டு வருடங்களாக பில்லியன் கணக்கான ரூபாய் நட்டத்தை பதிவு செய்திருந்த போதிலும், அதன் வரலாற்றில் மிகப்பெரிய வித்தியாசத்தில் தனது ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில(Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “2023 இல் இலங்கை மத்திய வங்கியின்(Central Bank of Sri Lanka) நிகர இழப்பு 114 பில்லியன் ரூபாய்கள் ,2022ல் நிகர இழப்பு 374 பில்லியன் ரூபாய்கள் ஆகும்.

இந்தநிலையில் ஒரு குறிப்பிட்ட நிறுவனம் தொடர்ச்சியாக நட்டத்தை சந்திக்கும் பட்சத்தில், அந்த நிறுவனத்தின் சலுகைகள், ஊக்குவிப்பு மற்றும் சம்பள உயர்வுகள் மட்டுப்படுத்தப்பட்டு இடைநிறுத்தப்படும் என்பதே வழமையான செயற்பாடாக இருக்கும்.

எவ்வாறாயினும், மத்திய வங்கி தனது ஊழியர்களுக்கு அதிகூடிய சம்பள உயர்வை வழங்கி வருகின்றது.

எனவே, நாட்டை ஏமாற்றியதற்காக மத்திய வங்கியின் ஆளுநரும் அதன் நிர்வாக சபையும் உடனடியாக பதவி விலக வேண்டும்.

அரசாங்கம் மற்றும் வங்கிகளுக்கு கடன் வழங்கி வட்டியை வசூலிப்பதன் மூலம் மத்திய வங்கி இலாபம் ஈட்டக்கூடிய ஒரு வழிமுறை உள்ளது.

பணத்தை அச்சிடுவதற்கு மத்திய வங்கிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதால் இது சாத்தியமாகிறது” என்று உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...