tamilnaadi 109 scaled
இலங்கைசெய்திகள்

மீகொட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் கைது

Share

மீகொட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் கைது

மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் பெண் ஊழியர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு பணத்தை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு ஆதரவான வர்த்தகர் உட்பட இரு சந்தேகநபர்கள் நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீகொட பொருளாதார நிலையத்தில் பணத்தை கொள்ளையடித்துவிட்டு, பூகொடையில் உள்ள வர்த்தகர் ஒருவரிடமிருந்து சில தங்க ஆபரணங்களை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்று மோட்டார் சைக்கிளை சந்தேகத்தின் பேரில் கைதான வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான உணவகத்தில் மறைத்து வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உள்ளிட்ட இருவருக்கு அடைக்கலம் கொடுத்த நபரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கடவட பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகரான 39 வயதுடைய நபரும் 44 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....