பாணந்துறையில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபரின் அலுவலகம் மற்றும் கணினி அறைக்குத் தீ வைத்த குற்றச்சாட்டில் இரண்டு மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பாணந்துறை வடக்கு கெசல்வத்த பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே நேற்று இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
12 மற்றும் 07 வயதுடைய குறித்த பாடசாலையைச் சேர்ந்த இரு மாணவர்களே இரண்டு அறைகளுக்கும் தீ வைத்துள்ளனர் என்று சி.சி.ரி.வி. காட்சிகளில் தெரியவந்துள்ளது.
மாணவர்கள் செய்த சிறு தவறுக்காக அதிபரால் தண்டிக்கப்பட்டதற்குப் பழிவாங்கும் நோக்கில் மாணவர்கள் இவ்வாறு செயற்பட்டுள்ளனர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாடசாலைச் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் விபரங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் கூறினர்.
சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இரு மாணவர்களும் பாணந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#SriLankaNews
Leave a comment