கொழும்பு, கடவத்தை 9ஆம் தூண் பகுதியில் இன்றிரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் பேலியகொடைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவரின் சடலம் பேலியகொடை வைத்தியசாலையிலும், மற்றையவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
#SriLankaNews