11 2
இலங்கைசெய்திகள்

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு: இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது

Share

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இரு பொலிஸ் அதிகாரிகள் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவில் இணைக்கப்பட்ட இரண்டு பொலிஸ் சார்ஜன்ட் அதிகாரிகள் தன்னிடம் ரூபா 25 000 இலஞ்சம் கோருவதாக அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவில் மணல் விற்பனை மற்றும் போக்குவரத்து செயற்பாட்டில் ஈடுபடும் ஒருவர் கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

இதனடிப்படையில் ஆணைக்குழு அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய சம்பவதினமான சனிக்கிழமை(21) அம்பாறை மணிக்கூட்டு கோபுரம் அருகில் D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவில் இணைக்கப்பட்ட இரண்டு பொலிஸ் சார்ஜன்ட் அதிகாரிகள் கூறியமைக்கு அமைவாக இலஞ்சப் பணத்தை மணல் விற்பனை செய்யும் நபர் வழங்கியுள்ளார்.

இதன்போது அங்கு மாறு வேடத்தில் காத்திருந்த இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவில் இணைக்கப்பட்ட இரண்டு பொலிஸ் சார்ஜன்ட் அதிகாரிகளை கைது செய்தனர்.

மேலும் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவில் மணல் விற்பனை மற்றும் போக்குவரத்து செயற்பாட்டில் ஈடுபடும் நபரிடம் இருந்து மணல் போக்குவரத்து தொழிலை எந்த பிரச்சினையும் இல்லாமல் தொடரவும் அந்த தொழில் தொடர்பாக சட்டப்பூர்வமாக செயல்படுவதைத் தவிர்க்கவும் சம்பந்தப்பட்ட இரண்டு அதிகாரிகளும் அந்த நபரிடமிருந்து ரூபா 25000 இலஞ்சம் கோரியிருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

பின்னர் சம்மாந்தறை பொலிஸ் நிலையத்திற்கு இரு சந்தேக நபர்களும் அழைத்து வரப்பட்டு விசாரணைகளின் பின்னர் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...