குடியகல்வு திணைக்களத்தின் இரு அதிகாரிகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது

tamilni 366

குடியகல்வு திணைக்களத்தின் இரு அதிகாரிகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது

பாதாள உலகக் குற்றவாளிகளுக்கு கடவுச்சீட்டு வழங்கிய இணையவழி குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் இரு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதாள உலகக் குற்றவாளிகளான ‘ஹீனடியன மகேஸ் மற்றும் ‘மத்துகம சான்’ எனப்படும் சான் அரோஸ் லியனகே ஆகியயோருக்கு கடவுச்சீட்டு வழங்கியதாக கூறப்படும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதிக் கட்டுப்பாட்டாளர் மற்றும் முன்னாள் பிரதிக் கட்டுப்பாட்டாளர் ஆகியோரே குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் வவுனியா நீதவான் நீதிமன்றிலும் மற்றைய சந்தேகநபர் கடுவெல நீதவான் நீதிமன்றத்திலும் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Exit mobile version