Mahinda Ranil 2 1 7 scaled
இலங்கைசெய்திகள்

இரு இந்தியர்களுக்கு நாட்டை விட்டு வெளியேற தடை

Share

இரு இந்தியர்களுக்கு நாட்டை விட்டு வெளியேற தடை

இந்திய முகாமையாளர்களான யோனி படேல் மற்றும் அவரது உதவியாளர் பச்சலோடியா ஆகாஷ் ஆகிய இருவருக்கும் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு குற்றங்களை தடுக்கும் விஷேட பொலிஸ் புலனாய்வு பிரிவினால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் இவ்வாறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த இந்திய பிரஜைகள், இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய இலங்கை தேர்வுக் குழு தலைவருமான உபுல் தரங்க மற்றும் நியூசிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நீல் புரூம் ஆகியோரை ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுமாறு அழுத்தம் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக உபுல் தரங்க மற்றும் நீல் புரூம் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மோசடி மற்றும் ஊழல் விசாரணை பிரிவிற்கும் அறிவித்துள்ளனர்.

இதன்பின்னரே இந்திய முகாமையாளர்கள் இருவருக்கும் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....