Mahinda Ranil 2 1 7 scaled
இலங்கைசெய்திகள்

இரு இந்தியர்களுக்கு நாட்டை விட்டு வெளியேற தடை

Share

இரு இந்தியர்களுக்கு நாட்டை விட்டு வெளியேற தடை

இந்திய முகாமையாளர்களான யோனி படேல் மற்றும் அவரது உதவியாளர் பச்சலோடியா ஆகாஷ் ஆகிய இருவருக்கும் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு குற்றங்களை தடுக்கும் விஷேட பொலிஸ் புலனாய்வு பிரிவினால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் இவ்வாறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த இந்திய பிரஜைகள், இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய இலங்கை தேர்வுக் குழு தலைவருமான உபுல் தரங்க மற்றும் நியூசிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நீல் புரூம் ஆகியோரை ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுமாறு அழுத்தம் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக உபுல் தரங்க மற்றும் நீல் புரூம் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மோசடி மற்றும் ஊழல் விசாரணை பிரிவிற்கும் அறிவித்துள்ளனர்.

இதன்பின்னரே இந்திய முகாமையாளர்கள் இருவருக்கும் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...