32 3
இலங்கைசெய்திகள்

மியன்மாருக்கு கடத்தப்பட்ட 20 இலங்கையர்கள் மீட்பு

Share

மியன்மாருக்கு கடத்தப்பட்ட 20 இலங்கையர்கள் மீட்பு

இணைய மோசடி கூட்டுகளில் கட்டாய குற்றச் செயல்களுக்காக மியன்மாருக்கு (Myanmar) கடத்தப்பட்ட இருபது (20) இலங்கை புலம்பெயர்ந்தோரை சர்வதேச புலம்பெயர்வுக்கான அமைப்பு (IOM – UN) மீட்டுள்ளது.

குறித்த இலங்கையர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் முறையான வேலை வாய்ப்புகள் மற்றும் பிற வாடிக்கையாளர் சேவைப் பாத்திரங்கள் என்ற போலிக்காரணத்தின் கீழ் பல்வேறு இணைய மோசடி நடவடிக்கைகளுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மியன்மாரில் இருந்து அவர்கள் மீட்கப்பட்டதும், தாய்லாந்தில் (Thailand) உள்ள இலங்கைத் தூதரகம், தாய்லாந்து அரசாங்கத்தால் நடத்தப்படும் தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளதுடன் ஐ.எம்.ஓ தேவையான உடனடி உதவிகளை வழங்கியுள்ளது.

இந்நடவடிக்கைகளை மேற்கொண்டு கடத்தப்பட்டோரை மீட்பதற்காக இலங்கையில் உள்ள ஐ.எம்.ஓ குழுவினர் தாய்லாந்திற்கு விஜயம் செய்துள்ளனர்.

மியன்மாரில் உள்ள இலங்கைத் தூதரகம், கடத்தல்காரர்களால் நடத்தப்படும் இணையக் குற்றச் செயல்களில் அடிமைப்படுத்தப்பட்ட இலங்கைப் பாதிக்கப்பட்டவர்களின் மோசமான நிலைமையை அதிகாரிகளின் கவனத்திற்குத் தொடர்ந்து கொண்டு வந்து, பாதிக்கப்பட்டவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்துகிறது.

இலங்கை, தாய்லாந்து மற்றும் மியன்மாரில் உள்ள அதன் இராஜதந்திர தூதரகங்கள், பாதுகாப்பு அமைச்சின் தலைமையிலான தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு – இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகியவை சுமூகமாக திரும்பும் செயல்முறையை உறுதி செய்வதில் வழக்கமான இடப்பெயர்வை ஊக்குவிக்க அனைத்து கூட்டாளர்களுடனும் நெருக்கமாக பணியாற்றுவதற்கு ஐ.எம்.ஓ செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...