32 3
இலங்கைசெய்திகள்

மியன்மாருக்கு கடத்தப்பட்ட 20 இலங்கையர்கள் மீட்பு

Share

மியன்மாருக்கு கடத்தப்பட்ட 20 இலங்கையர்கள் மீட்பு

இணைய மோசடி கூட்டுகளில் கட்டாய குற்றச் செயல்களுக்காக மியன்மாருக்கு (Myanmar) கடத்தப்பட்ட இருபது (20) இலங்கை புலம்பெயர்ந்தோரை சர்வதேச புலம்பெயர்வுக்கான அமைப்பு (IOM – UN) மீட்டுள்ளது.

குறித்த இலங்கையர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் முறையான வேலை வாய்ப்புகள் மற்றும் பிற வாடிக்கையாளர் சேவைப் பாத்திரங்கள் என்ற போலிக்காரணத்தின் கீழ் பல்வேறு இணைய மோசடி நடவடிக்கைகளுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மியன்மாரில் இருந்து அவர்கள் மீட்கப்பட்டதும், தாய்லாந்தில் (Thailand) உள்ள இலங்கைத் தூதரகம், தாய்லாந்து அரசாங்கத்தால் நடத்தப்படும் தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளதுடன் ஐ.எம்.ஓ தேவையான உடனடி உதவிகளை வழங்கியுள்ளது.

இந்நடவடிக்கைகளை மேற்கொண்டு கடத்தப்பட்டோரை மீட்பதற்காக இலங்கையில் உள்ள ஐ.எம்.ஓ குழுவினர் தாய்லாந்திற்கு விஜயம் செய்துள்ளனர்.

மியன்மாரில் உள்ள இலங்கைத் தூதரகம், கடத்தல்காரர்களால் நடத்தப்படும் இணையக் குற்றச் செயல்களில் அடிமைப்படுத்தப்பட்ட இலங்கைப் பாதிக்கப்பட்டவர்களின் மோசமான நிலைமையை அதிகாரிகளின் கவனத்திற்குத் தொடர்ந்து கொண்டு வந்து, பாதிக்கப்பட்டவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்துகிறது.

இலங்கை, தாய்லாந்து மற்றும் மியன்மாரில் உள்ள அதன் இராஜதந்திர தூதரகங்கள், பாதுகாப்பு அமைச்சின் தலைமையிலான தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு – இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகியவை சுமூகமாக திரும்பும் செயல்முறையை உறுதி செய்வதில் வழக்கமான இடப்பெயர்வை ஊக்குவிக்க அனைத்து கூட்டாளர்களுடனும் நெருக்கமாக பணியாற்றுவதற்கு ஐ.எம்.ஓ செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...