tamilnif 26 scaled
இலங்கைசெய்திகள்

நாட்டில் 77 சுனாமி எச்சரிக்கை கோபுரங்கள் செயலிழப்பு

Share

நாட்டின் கரையோரப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை கோபுரங்கள் செயலிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

அந்த அறிவிப்பில் 77 சுனாமி எச்சரிக்கை கோபுரங்கள் செயலிழந்த நிலையில் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறிப்பிடுகையில்,

செயலிழந்த 77 கோபுரங்களில் 11 எச்சரிக்கை கோபுரங்கள் பேரிடர் மேலாண்மை மையத்திலிருந்தும் 9 எச்சரிக்கை கோபுரங்கள் கீழ் மட்டத்திலிருந்தும் செயல்படுத்த முடியும் என கூறப்பட்டுள்ளது.

எனினும் மற்றைய 57 எச்சரிக்கை கோபுரங்கள் முற்றிலும் செயலிழந்த நிலையிலுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், எச்சரிக்கை கோபுரங்களுக்கான தொழில்நுட்ப நிபுணத்துவம் அமெரிக்க சமிக்ஞை நிறுவனம் ஒன்றிடம் வழங்கப்பட்டு வந்தது.

எனினும் பின்னர், பேரிடர் முகாமைத்துவ மையத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் மாவட்ட அளவில் பொலிஸ் மற்றும் இராணுவம் பொறுப்பேற்றுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...