25 6846eff798148
இலங்கைசெய்திகள்

டிரம்பின் வரிக் கொள்கையால் பாதிக்கப்படவுள்ள இலங்கை

Share

அமெரிக்க ஜனாதிபதியின் வரிக் கொள்கை தொடர்பில் வழங்கப்பட்ட 3 மாத கால அவகாசம் அடுத்த மாதம் 8 ஆம் திகதி முடிவடைவதற்கு முன்பு, ஒரு நாடாக இலங்கை அதன் கட்டண கொள்கையை தளர்த்துவதற்கு உறுதியான அடித்தளத்தை அமைக்க வேண்டும் என்று பேராசிரியர் சிறிமல் அபேரத்ன தெரிவித்துள்ளார்.

விவசாய உபகரணங்கள், உப்பு மற்றும் முட்டைகள் மீதான இறக்குமதி வரிகள் தளர்த்தப்பட வேண்டும். சுதந்திர வர்த்தகத்தை நோக்கி நகர சந்தை தடைகள் நீக்கப்பட வேண்டும் என பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவால் இறக்குமதி வரிகள் மற்றும் சந்தை தடைகள் நீக்கப்பட வேண்டும். உலக வர்த்தக அமைப்பின் கொள்கைகளுக்கமைய, அனைத்து நாடுகளுக்கும் பொதுவான சந்தை கட்டணக் கொள்கை நிறுவப்பட வேண்டும்.

அமெரிக்க ஜனாதிபதியால் உருவாக்கப்பட்ட சூழ்நிலைக்கு மேலதிகமாக நீண்ட காலமாக ஒரு பாதுகாப்பான பொருளாதாரக் கொள்கையை செயல்படுத்தி போதுமான சந்தை சூழ்நிலையை உருவாக்க அரசாங்கம் தவறியுள்ளது.

அதற்கமைய, ஒரு நாடாக நாம் இப்போது அல்லது பின்னர் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் நுழைய வேண்டும். அத்தகைய சமரசம் எட்டப்படாவிட்டால், இலங்கையின் ஆடை ஏற்றுமதிகள் சர்வதேச சந்தையில் மிகவும் பாதகமான சந்தை நிலைமைகளின் கீழ் போட்டியிட வேண்டியிருக்கும்.

அதற்கமைய, இலங்கை ஆடைத் துறையில் அதன் உலகளாவிய சந்தைப் பங்கை இழக்கும் அபாயத்தில் இருப்பது மட்டுமல்லாமல், அந்தத் துறையில் இருக்கும் முதலீடுகளையும் இழக்கும் அபாயத்தில் உள்ளது.

பொருளாதார சீர்திருத்தங்கள் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படாததன் விளைவுகளை நாடு இப்போது அனுபவித்து வருகின்றது என பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
25 6849c5dfe0a82
உலகம்செய்திகள்

சீனாவுடன் அதிரடியாக ஒப்பந்தம் செய்த ட்ரம்ப்..! நடக்கவுள்ள மாற்றங்கள்

லண்டனில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமெரிக்காவும் சீனாவும் ஒரு புதிய ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி...

25 684a2d1c7f215
இலங்கைசெய்திகள்

காலஞ்சென்ற மற்றும் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

காலஞ்சென்ற மற்றும் ஓய்வு பெற்றுக்கொண்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் முதல்...

25 684a1d46ac31b
இந்தியாசெய்திகள்

இந்தியா – இலங்கை ஒப்பந்தம் குறித்து வெளியாகியுள்ள சந்தேகம்

இந்தியாவின் இணக்கப்பாடு இன்றி இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையை அம்பலப்படுத்த முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளதாக...

25 684a2b04cca7e
இலங்கைசெய்திகள்

வெலிகம சம்பவத்தின் போது தவறாக வழிநடத்தப்பட்ட அதிகாரிகள்

2023ஆம் ஆண்டு வெலிகம சம்பவம் குறித்து விசாரிக்கச் சென்ற தன்னையும் ஏனையவர்களையும் மூத்த பொலிஸ் அதிகாரிகள்...