3 5
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 67 பேர் சிக்கினர்! – திருமலையில் கடற்படை அதிரடி

Share

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாட்டுக்குச் செல்வதற்கு முயற்சித்த 67 பேர் திருகோணமலையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை, சல்லி – சாம்பல் தீவில் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என்று இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

இரண்டு ஓட்டோக்களும், கப் வாகனம் ஒன்றும் சந்தேகநபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வாகனங்களில் பயணித்த 12 ஆண்கள் கைதுசெய்யப்பட்டதுடன், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் சட்டவிரோதமாக நாட்டிலிருந்து செல்வதற்குப் படகில் தயாராகவிருந்தவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஆட்கடத்தலில் ஈடுபடும் 5 சந்தேகநபர்களும் இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று இலங்கைக் கடற்படை தெரிவித்துள்ளது.

வௌிநாட்டுக்குச் செல்வதற்கு தயாராகவிருந்த 45 ஆண்களும், 7 பெண்களும், சிறு பிள்ளைகள் மூவரும் குறித்த படகில் இருந்துள்ளனர்.

யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், அம்பாறை, இரத்தினபுரி, கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டுள்ளவர்களை நிலாவௌி மற்றும் உப்புவௌி பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று இலங்கைக் கடற்படை மேலும் குறிப்பிட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...