1 84
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

திருகோணமலை கடற்கரை விவகாரம்: 4 பிக்குகள் உட்பட 10 பேரின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு!

Share

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் அத்துமீறி புத்தர் சிலையை வைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 4 பௌத்த பிக்குகள் மற்றும் 6 பொதுமக்கள் என மொத்தம் 10 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (09) திங்கட்கிழமை திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, நீதிபதியினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முன்னதாக, திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் பிரதிவாதிகளுக்குப் பிணை மறுக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, அவர்கள் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுக்களும் கடந்த பெப்ரவரி 3ஆம் திகதி நிராகரிக்கப்பட்டன.

இந்நிலையில், பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகளால் இன்றைய தினம் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் பிணை கோரி மீண்டும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. எனினும், வழக்கின் தீவிரத்தன்மை மற்றும் முன்னைய நீதிமன்ற உத்தரவுகளைக் கருத்திற்கொண்டு, பிணை மனுக்களை நிராகரித்த மேல் நீதிமன்றம், அனைத்துப் பிரதிவாதிகளையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.

 

 

Share
தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...