10 34
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் முப்படையினரால் கையகப்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள்

Share

கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 1209. 22 ஏக்கர் காணிகளை முப்படையினர் கையகப்படுத்தி வைத்துள்ளதாக மாவட்ட ரீதியாக பெற்றுக் கொள்ளப்பட்ட புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தின் பின்னரான மீள் குடியமர்வைத் தொடர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் குடியேறியுள்ளனர்.

இருந்தபோதும் குறிப்பிட்ட சில பகுதிகளில் பொது மக்களின் காணிகள் மற்றும் திணைக்களங்களுக்குரித்தான காணிகள் இதுவரை விடுவிக்கப்படாது தொடர்ந்தும் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றன.

இவ்வாறான நிலையில் காணி உரிமையாளர்கள் பலர் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 653, 65 ஏக்கர் காணிகள் தொடர்ந்தும் படையினரின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்றன.

குறிப்பாக அம்பாள் நகர் கிளிநொச்சி நகரம், திருநகர் ஜெயந்தி நகர் இரணைமடு சந்தி ஆகிய பகுதிகளில் இவ்வாறு அதிகமான காணிகள் படையினரின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்றன.

அதேபோன்று கண்டாவளை பிரதேச செயலாள பிரிவில் 180, 38 ஏக்கர் நிலப் பகுதிகளும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 116, 61 ஏக்கர் காணிகளும் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 248, 18 ஏக்கர் காணிகளும் படையினர் வசமுள்ளன.

குறிப்பாக பூநகரி பிரதான மையப்பகுதியான வாடியடி சந்திக்கு அண்மித்த பகுதியில் உள்ள சுமார் 14 பேருக்கு சொந்தமான காணிகளும் இதுவரை விடுவிக்கப்படாத நிலையில் அதன் உரிமையாளர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இவ்வாறு கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி கண்டாளை பூனகரி பச்சிலைப்பள்ளி ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 1209, 22 ஏக்கர் வரையான காணிகளை கடந்த 15 வருடங்களுக்கு மேல் படையினர் கையகப்படுத்தி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2FUIXfciu0r8En4NCdFEIo
செய்திகள்உலகம்

தென் கொரிய முன்னாள் முதல் பெண்மணிக்கு சிறைத்தண்டனை: லஞ்சம் மற்றும் விலையுயர்ந்த பரிசுகளைப் பெற்றதாக நீதிமன்றம் தீர்ப்பு!

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் (Yoon Suk...

1769590369 images 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாவகச்சேரி இராணுவ முகாமில் துப்பாக்கிச் சூடு: சிப்பாய் தன்னைத்தானே சுட்டு தற்கொலை முயற்சி!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில்...

Kassapa Thera
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை கடற்கரை ஆக்கிரமிப்பு: பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

திருகோணமலை டச்பே (Dutch Bay) கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத நிர்மாணங்களை மேற்கொண்டு புத்தர் சிலையை வைத்ததாகக்...

ed1ef740 7f31 11f0 ab3e bd52082cd0ae.jpg
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக மார்ச் மாதம் குற்றப்பத்திரிகை: சட்டமா அதிபர் நீதிமன்றில் அதிரடி அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கில், வரும்...