இலங்கைசெய்திகள்

தேர்தல் காலங்களில் பொது வளங்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

27 5
Share

தேர்தல் காலங்களில் பொது வளங்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது பொது வளங்களை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேசனல் ஸ்ரீலங்கா கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இந்தநிலையில், அனைத்து குடிமக்களுக்கும் சொந்தமான பொது வளங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் அறங்காவலர்களாக அரச அதிகாரிகளின் முக்கிய பங்கை, நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நடீசானி பெரேரா (Nadeeshani Perera) வலியுறுத்தியுள்ளார்.

அனைத்து குடிமக்களுக்கும் சொந்தமான வளங்கள் மீதான அதிகாரம் அரச அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள வளங்கள், பொது நிதியில் இருந்து இயற்கை வளங்கள் வரை அனைத்து அரச சொத்துக்கள் வரை இலங்கை மக்களுக்கும் குழந்தைகளுக்கும் சொந்தமானது என்று பெரேரா கூறியுள்ளார்.

மக்கள் பிரதிநிதிகள் இந்த வளங்களைப் பாதுகாக்கும் பணியை பொது அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

எனவே அவர்கள் பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்கான புனிதமான கடமையைக் கொண்டுள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் கூட தங்கள் அரசியல் பிரசாரங்களுக்கு அரச வளங்களை பயன்படுத்த முடியாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்

அது ஒரு குற்றம், நம்பிக்கை மீறல் என அரசியல் சாசனத்தால் கூறப்பட்டுள்ளதை நினைவூட்டியுள்ள அவர், இந்த குற்றங்களுக்காக சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...