NPC 850x460 1
செய்திகள்இலங்கை

வடக்கு செயலாளர்களிடையே இடமாற்றம்!!

Share

வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களாக இருந்தவர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு ஆணையாளரின் உத்தரவின்படி மாகாண நிர்வாகத்தில் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அதன்பிரகாரம் சுகாதார அமைச்சின் செயலாளராக பணிபுரிந்த செந்தில்நந்தனன் மாகாணசபை பேரவை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் ஆளுநரின் செயலாளராக கடமையாற்றிய சரஸ்வதி மோகநாதன் சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்வி அமைச்சின் செயலாளராக பணிபுரிந்த இளங்கோவன் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது உள்ளுராட்சி அமைச்சின் செயலாளராகவுள்ள வரதீஸ்வரன் கல்வி அமைச்சின் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

பேரவைச் செயலாளர் குகநாதன் பிரதி பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் பதில் பிரதம செயலாளராக பணியாற்றி வந்த பற்றிக் றஞ்சன் உள்ளுராட்சித் திணைக்கள ஆணையாளராக செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆளுநரின் செயலாளராக தற்போது பிரதேச செயலாளராக கடமையாற்றும் ஒருவர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...