24 660783d30acc7
இலங்கைசெய்திகள்

கொழும்பு – வெள்ளவத்தை பகுதி மக்களுக்கு வெளியான அறிவித்தல்

Share

கொழும்பு – வெள்ளவத்தை பகுதி மக்களுக்கு வெளியான அறிவித்தல்

கரையோர தொடருந்து மார்க்கத்தில் இன்றும் நாளையும் தொடருந்து சேவைகள் தாமதமாக இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை தொடருந்து திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொல தெரிவித்துள்ளார்.

தொடருந்து மார்க்கத்தில் ஏற்பட்டுள்ள தடங்கல் குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

பம்பலப்பிட்டி தொடருந்து நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் காரணமாக கரையோர தொடருந்து மார்க்கத்தில் இன்றும் நாளையும் தொடருந்து சேவைகள் தாமதமாக இடம்பெறும்.

இதற்கமைய கரையோர தொடருந்து மார்க்கத்தில் இன்றைய தினம் 25 தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை கொழும்பில் இருந்து வெள்ளவத்தை வரை ஒரு மார்க்கத்தில் மாத்திரம் தொடருந்து சேவை இடம்பெறுவதாகவும் தொடருந்து திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...