24 665d51103d868
இலங்கைசெய்திகள்

தொடருந்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Share

தொடருந்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பிரதான மார்க்கத்தின் தொடருந்து சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்லேவெல மற்றும் கனேகொட தொடருந்து நிலையங்களுக்கும் வெயங்கொட மற்றும் கம்பஹா தொடருந்து நிலையங்களுக்கும் இடையில் இவ்வாறு சமிக்ஞை அமைப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை தொடருந்து திணைக்கள (Sri Lanka Railways) துணைப் பொது முகாமையாளர் ஜெ.என்.இந்திபொலகே (J.N. Inthipolage) தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சீரற்ற வானிலையுடன் பிரதான மார்க்கம், கரையோர மார்க்கம் மற்றும் புத்தளம் மார்க்கத்திலும் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சில தொடருந்து சேவைகள் தாமதமாக வருவதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

பல தொடருந்து நிலையங்களுக்கு இடையில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையினால் தொடருந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை வாக மற்றும் கொஸ்கம தொடருந்து நிலையங்களுக்கு இடையிலான பாலம் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் களனிவெளி மார்க்கத்தில் பயணிக்கும் தொடருந்துகள் வாக தொடருந்து நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரை புத்தாண்டு பாதுகாப்பு: நாடு முழுவதும் 10,000 பொலிஸார் விசேட கடமையில்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டுப் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், நாடு தழுவிய ரீதியில் விசேட...

Untitled 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் விநியோகம் உறுதி: பெட்ரோலிய கூட்டுத்தாபனம் உத்தியோகபூர்வ அறிவிப்பு!

இலங்கைக்குத் தேவையான எரிபொருளை ரஷ்யாவிடமிருந்து பெற்றுக்கொள்வது தற்போது உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்...

Untitled 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொச்சிக்கடையில் சட்டவிரோத டீசல் கையிருப்பு: 35 வயதுடைய நபர் கைது!

கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள கொச்சிக்கடை, தலுவகொட்டுவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் டீசலை வைத்திருந்த 35...

Untitled 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் போதைப்பொருள் வர்த்தகத்தை இயக்கும் 5 முக்கிய சூத்திரதாரிகள்: டுபாய் மற்றும் ஐரோப்பாவிலிருந்து செயற்படுவது அம்பலம்!

இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட போதிலும், நாட்டின் ஒட்டுமொத்த போதைப்பொருள்...