கலபட மற்றும் வட்டவாலா இடையே இடம்பெற இருந்த தொடருந்து விபத்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் தவிர்க்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது நேற்று(22) இரவு இடம்பெற்றுள்ளது.
மேற்குறித்த பகுதியிலுள்ள தொடருந்து பாதையில் மரம் ஒன்று விழுவதைக் கண்ட ஓட்டுநர், சாமர்த்தியமாக தொடருந்தை நிறுத்தி விபத்தை தடுத்துள்ளார்.
இதனையடுத்து, தொடருந்து பாதையில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் மலையக தொடருந்து சேவைகள் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாகியுள்ளன.
இதனையடுத்து, தொடருந்து பாதையில் விழுந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்த பின்னர் மீண்டும் பயணத்தைத் தொடங்கியதாக நாவலப்பிட்டி தொடருந்து நிலைய அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.