rtjy 242 scaled
இலங்கைசெய்திகள்

தொடருந்து மிதி பலகையில் தொங்கி சென்றவர் பலி

Share

தொடருந்து மிதி பலகையில் தொங்கி சென்றவர் பலி

ஹிக்கடுவை நோக்கி பயணித்த அதிவேக தொடருந்தின் மிதி பலகையில் பயணித்த நபர் ஒருவர் ஒளி சமிக்ஞை கோபுரத்துடன் மோதி பலத்த காயமடைந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை வடக்கு மற்றும் களுத்துறை தெற்கு புகையிரத நிலையங்களுக்கு இடையில் களுத்துறை அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தொடருந்து பெட்டிகளில் அதிகளளவில் பயணிகள் இருந்தமையினால் மிதிபலகையில் வெளியில் தொங்கியபடி சென்ற போது ஒளி சமிக்ஞை கோபுரத்துடன் மோதி சுமார் 30 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

இதனை தொடர்ந்து காயமடைந்த நபர் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் களுத்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...