15 22
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கையில் ஏற்படவிருந்த பாரிய விபத்து – இளைஞர்களின் செயலால் தவிர்ப்பு

Share

தென்னிலங்கையில் ஏற்படவிருந்த பாரிய விபத்து – இளைஞர்களின் செயலால் தவிர்ப்பு

கரையோர ரயிலின் வஸ்கடுவ பகுதி தண்டவாளத்தில் ஏற்பட்ட வெடிப்பினால் ஏற்படவிருந்த பாரிய விபத்து, பிரதேச இளைஞர்கள் இருவரின் விழிப்புணர்வினால் தவிர்க்கப்பட்டதாக வாதுவ ரயில்வே பிரிவு தெரிவித்துள்ளது.

 

களுத்துறையில் இருந்து கொழும்புக்கு செல்லும் மேல் பாதையின் இணைப்பில் தண்டவாளத்தின் ஒரு பகுதியில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதை வஸ்கடுவ பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் அவதானித்துள்ளனர்.

 

அதற்கமைய, வாதுவ ரயில் நிலைய பொறுப்பதிகாரிக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டது.

 

இதன் காரணமாக பிரதான ரயில் கட்டுப்பாட்டு அறைக்கு அறிவித்ததுடன், வாதுவ வீதிப் பிரிவின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களை ரயில் பாதையை சரிசெய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.

 

புனரமைப்பின் போது கடலோர ரயில்வேயின் மேல் ரயில் பாதையை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மூடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

இதன் காரணமாக நேற்று ஏற்படவிருந்த மிகப் பெரிய ரயில் விபத்து இரு இளைஞர்களின் செயற்பாடு காரணமாக தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 6
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம், வளலாய் கடற்கரையில் பௌத்த சிலை கரையொதுங்கியது – மியன்மாரிலிருந்து வந்திருக்கலாம் என சந்தேகம்!

யாழ்ப்பாணம், வளலாய் பகுதி கடற்கரையில் இன்றைய தினம் (நவம்பர் 17) பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை...

25 6918218c86028
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டுப் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்த இளைஞன் எதிர்வரும் நவம்பர் 28 வரை விளக்கமறியலில்!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேசத்தில் வெளிநாட்டு யுவதி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் சம்பவம்...

25 68f5630be3ac6
செய்திகள்இலங்கை

இலங்கைச் சிறைச்சாலைகளில் கட்டுக்கடங்காத நெரிசல்: 37,000 கைதிகள் அடைப்பு – ‘500 பேர் நின்று உறங்குகிறார்கள்’ எனப் பாராளுமன்றில் அம்பலம்!

இலங்கைச் சிறைச்சாலைகளில் நிலவும் கட்டுக்கடங்காத நெரிசல் மற்றும் அதன் காரணமாகக் கைதிகள் எதிர்கொள்ளும் மனிதநேயமற்ற நிலைமைகள்...

Election Commission 1
இலங்கைஅரசியல்செய்திகள்

வாக்காளர் பட்டியல் திருத்தம் 2025: தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக ஆரம்பம் – பெயர் சேர்க்க ஊடகங்களுக்கு நேரடிப் பொறுப்பு!

2025ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகளைத் (Voter Register Revision) தேர்தல்கள் ஆணைக்குழு...