தெஹியத்தகண்டிய, முவகம்மன பகுதியில் இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும், இரண்டு வயதுக் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பொலன்னறுவை – மஹியங்கனை வீதியில், தெஹியத்தகண்டியிலிருந்து மஹியங்கனை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தும், அதற்கு எதிர் திசையில் வந்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலத்த காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, 33 வயதுடைய தாயும், அவரது 2 வயது ஆண் குழந்தையும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இவர்கள் மாவநாகம பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டி சாரதியான தந்தை மற்றும் 11 வயதுடைய மகன் ஆகியோர் மேலதிக சிகிச்சைகளுக்காகப் பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பாகப் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளைத் தெஹியத்தகண்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.