24 666d4f34b07ba
இலங்கைசெய்திகள்

கொழும்பில் போக்குவரத்து விதிகளை மீறிய சாரதிகளுக்கு அபராதம்

Share

கொழும்பில் போக்குவரத்து விதிகளை மீறிய சாரதிகளுக்கு அபராதம்

கொழும்பில் (Colombo) பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி அமைப்புகளின் ஊடாக அடையாளம் காணப்பட்ட போக்குவரத்து விதிகளை மீறிய 4500இற்கும் மேற்பட்ட வாகன சாரதிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துப் பிரிவின் சிசிரிவிகள் மூலம் கைப்பற்றப்பட்ட குற்றங்களின் காணொளி ஆதாரங்கள் மற்றும் வாகனங்களின் பதிவுகள் ஆகியன சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து, வாகன உரிமையாளர்களுக்கு பொலிஸ் நிலையங்களால், குற்றங்களுக்கான அபராதத் தாள்கள் விநியோகிக்கப்படவுள்ளன.

மேலும், இந்த செயல்திட்டமானது, கடந்த ஜனவரி 22ஆம் திகதி கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எனினும், போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிரான சட்டம் கடந்த பெப்ரவரி முதலாம் திகதியே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிசிரிவி கருவிகள் மூலம் சாலை விதிகளை மீறுதல், போக்குவரத்து விளக்குகளை பின்பற்றாமை, தரிப்பிடங்களாக அறிவிக்கப்படாத பகுதிகளில் வாகனங்களை நிறுத்துதல் மற்றும் சிவப்பு விளக்கை மீறி வாகனம் ஓட்டுதல் போன்ற போக்குவரத்து குற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அத்துடன், போலி இலக்கத் தகடுகளுடன் வாகனங்களை செலுத்தும் சில சம்பவங்களையும் இந்த செயல்திட்டத்தின் ஊடாக அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...