21 6084fd99c3f8e
இலங்கைசெய்திகள்

நுவரெலியாவில் சுற்றுலாவிகள் சுகாதார நடைமுறைகளில் அலட்சியம்!!

Share

நுவரெலியாவிற்கு கடந்த நீண்ட வார இறுதியில் அதிகளவான வெளிநாட்டு மற்றும் உள்ளூர் உல்லாசப் பயணிகள் வருகை தந்துள்ளதாக நுவரெலியா சுற்றுலாப் பதிவு செய்யப்பட்ட குடியிருப்பாளர் சங்கத்தின் தலைவர் மஹிந்த தொடம்பேகமகே தெரிவித்தார்.

அதில் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் கொவிட் 19 சுகாதார விதிமுறைகளை பின்பற்றுவதில் அலட்சியம் காட்டிவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பில் ஊடகங்களுக்கு வௌியிட்டுள்ள விசேட அறிக்கையொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பதிவுசெய்யப்பட்டு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு நுவரெலியாவில் பதிவுசெய்யப்பட்ட உரிமையாளர்கள் சங்கம் தங்குமிட வசதிகளை சுகாதார வழி வழிகாட்டல்களுக்கு அமைய வழங்குகின்றனர்.

ஆனால் பதிவுசெய்யப்படாத தங்குமிடங்களுக்கு வரும் உல்லாச பயணிகள் சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுவதில்லை என அவர் தெரிவித்தார்.

நுவரெலியாவிற்கு வருகை தரும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளும் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும் எனவும், இது தொடர்பில் சுகாதாரத் துறை மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் மஹிந்த தொடம்பேகமகே தெரிவித்தார்.

நுவரெலியாவிற்கு வருகை தரும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி வேடிக்கை பார்க்க வேண்டுமென நுவரெலியா கிராண்ட் ஹோட்டலின் உதவி முகாமையாளர் ஹிரன் கொடித்துவக்கு தெரிவித்தார்.

நீண்ட வார இறுதியில் நுவரெலியாவிற்கு வருகை தரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாது நடந்துகொள்வதை காணக்கூடியதாகவிருந்தாக அப்பகுதி செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் முதியவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இன்று (மார்ச் 31, 2026) முதியவர் ஒருவரின் சடலம்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை!

ரஷ்ய அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko), 05 நாட்கள் உத்தியோகபூர்வ...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் வளர்ச்சி: மார்ச் மாதத்தில் மாத்திரம் 1.7 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

இலங்கையின் சுற்றுலாத்துறை நடப்பு ஆண்டில் பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், கடந்த மார்ச்...

Untitled 64
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாநகர சபைகள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!

மீதொட்டமுல்ல “பொதுவில் கும்புர” எனும் காணியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளைக் கொட்டியதன் மூலம், கொழும்பு மாநகர...