21 6084fd99c3f8e
இலங்கைசெய்திகள்

நுவரெலியாவில் சுற்றுலாவிகள் சுகாதார நடைமுறைகளில் அலட்சியம்!!

Share

நுவரெலியாவிற்கு கடந்த நீண்ட வார இறுதியில் அதிகளவான வெளிநாட்டு மற்றும் உள்ளூர் உல்லாசப் பயணிகள் வருகை தந்துள்ளதாக நுவரெலியா சுற்றுலாப் பதிவு செய்யப்பட்ட குடியிருப்பாளர் சங்கத்தின் தலைவர் மஹிந்த தொடம்பேகமகே தெரிவித்தார்.

அதில் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் கொவிட் 19 சுகாதார விதிமுறைகளை பின்பற்றுவதில் அலட்சியம் காட்டிவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பில் ஊடகங்களுக்கு வௌியிட்டுள்ள விசேட அறிக்கையொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பதிவுசெய்யப்பட்டு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு நுவரெலியாவில் பதிவுசெய்யப்பட்ட உரிமையாளர்கள் சங்கம் தங்குமிட வசதிகளை சுகாதார வழி வழிகாட்டல்களுக்கு அமைய வழங்குகின்றனர்.

ஆனால் பதிவுசெய்யப்படாத தங்குமிடங்களுக்கு வரும் உல்லாச பயணிகள் சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுவதில்லை என அவர் தெரிவித்தார்.

நுவரெலியாவிற்கு வருகை தரும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளும் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும் எனவும், இது தொடர்பில் சுகாதாரத் துறை மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் மஹிந்த தொடம்பேகமகே தெரிவித்தார்.

நுவரெலியாவிற்கு வருகை தரும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி வேடிக்கை பார்க்க வேண்டுமென நுவரெலியா கிராண்ட் ஹோட்டலின் உதவி முகாமையாளர் ஹிரன் கொடித்துவக்கு தெரிவித்தார்.

நீண்ட வார இறுதியில் நுவரெலியாவிற்கு வருகை தரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாது நடந்துகொள்வதை காணக்கூடியதாகவிருந்தாக அப்பகுதி செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 9 2
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டம்: தரவு கட்டமைப்பில் மாற்றம் செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை! 

அஸ்வெசும நலன்புரிச் சலுகைத் திட்டத்தை முறையாகச் செயற்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அதன் தரவு கட்டமைப்பிலும்...

images 8 3
செய்திகள்இலங்கை

இலங்கையின் வாகனப் பதிவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: சொகுசு வாகன இறக்குமதி உயர்வு.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி, நாட்டில் சொகுசு வாகன...

1707240129 National Peoples Power l
இலங்கைஅரசியல்செய்திகள்

சீதாவக்க பிரதேச சபையைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி: தவிசாளராக பி.கே. பிரேமரத்ன தெரிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, இன்று (நவம்பர் 18) நடைபெற்ற...

1 The Rise in Cybercrimes
செய்திகள்இலங்கை

இலங்கையில் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவு – சிறுவர்கள் தொடர்புடைய 35 வழக்குகள்!

இலங்கையில் கடந்த 11 மாதங்களில் 6,700இற்கும் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி...