rtjy 304 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

Share

இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஒக்டோபர் மாதத்தின் முதல் 22 நாட்களில் இலங்கைக்கு சுமார் 77,763 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் தினசரி சராசரி வருகை 3,534 ஆக பதிவாகியுள்ளதுடன் இது கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது முன்னேற்றத்தை காண்பிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஒக்டோபர் மாதத்தின் முதலாவது வாரத்தில் மொத்தம் 23,073 சுற்றுலாப்பயணிகளும், இரண்டாவது வாரத்தில் 23,434 இதே எண்ணிக்கை மூன்றாவது வாரத்தில் இன்னும் அதிகரித்து 31,265 ஆக பதிவாகியுள்ளது.

ஆனால், ஒக்டோபர் மாதத்தில் எதிர்பார்க்கப்பட்டிருந்த 147,789 சுற்றுலாப்பயணிகள் என்ற இலக்கில் 53 சதவீத வருகையையே இலங்கை எட்டியுள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதங்களைப் போலவே, இம்மாதமும் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 26 சதவீத பங்களிப்பை வழங்கி இந்தியா முதலிடத்தையும் 9 சதவீத பங்களிப்புடன் இரண்டாவது இடத்தினை ரஷ்யாவும், 8 சதவீத பங்களிப்புடன் ஐக்கிய இராச்சியம் மூன்றாம் நிலையிலும் உள்ளது.

மேலும், குறித்த வரிசையில் ஜெர்மனி, சீனா, அவுஸ்திரேலியா, மாலைதீவுகள், அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...