24 66076b876579e
இலங்கைசெய்திகள்

மரக்கறி மற்றும் மீன்களின் விலைகளில் மாற்றம்

Share

மரக்கறி மற்றும் மீன்களின் விலைகளில் மாற்றம்

பேலியகொட மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலையில் நேற்று (29) கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பேலியகொட மெனிங் சந்தை பொது வர்த்தக சங்கத்தின் உப தலைவர் எச்.டி.என். சமரதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும், மரக்கறிகளின் விலை குறைந்துள்ளமையினால் வாடிக்கையாளர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும், காய்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் சில வியாபாரிகள் தூக்கி எறிவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதன்படி, நேற்று ஒரு கிலோ முள்ளங்கி 40 ரூபாய்க்கும், கருவேப்பிலை கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளது.

மேலும், வெங்காய இலை 80 ரூபாய், ஒரு கிலோ கத்தரிக்காய் 100 ரூபாய், மக்காச்சோளம் கிலோ 100 ரூபாய், கத்தரிக்காய் 100 ரூபாய், தக்காளி கிலோ 120, பூசணி 120 ரூபாய், போஞ்சி கிலோ 100, வெண்டைக்காய் கிலோ 140, கரட் 150, முட்டைகோஸ் கிலோ 150, பச்சை மிளகாய் கிலோ 150, ஒரு கிலோ மீன் மிளகாய் 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஒரு கிலோ வெள்ளரி 20 ரூபாய்க்கும், ஒரு கிலோ இஞ்சி 1300 ரூபாய்க்கும் விற்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று (29) பேலியகெட மீன்களின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பேலியகொட மீன் சந்தை வர்த்தக நிலையத்தின் வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் ஜெயந்த குரே தெரிவித்துள்ளார்.

பண்டிகைக்காலம் நெருங்கும் போது மீன்களின் விலை அதிகரிப்பது வழக்கம் என்றும் சாலயா மொத்த விற்பனை 550 ரூபாவாகவும், லின்னா 750 ரூபாவாகவும், ஹுருல்லா 750 ரூபாவாகவும், பலாயா 650 ரூபாவாகவும், கெலவல்லா 900 ரூபாவாகவும், தலபட் 1400 ரூபாவாகவும், பாராவோ 1400 ரூபாவாகவும், ஒரு கிலோ தோரா 1200 ரூபாவாகவும் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு கிலோ கும்பலாவ 800 ரூபாவுக்கும், இறால் கிலோ 2000 ரூபாவுக்கும், கணவாய் கிலோ 1200 ரூபாவுக்கும், விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...