28 5
இலங்கைசெய்திகள்

இன்று வெறுமையாக பூமிக்கு திரும்பவுள்ள ஸ்டார்லைனர் விண்கலம்

Share

இன்று வெறுமையாக பூமிக்கு திரும்பவுள்ள ஸ்டார்லைனர் விண்கலம்

சர்வதேச விண்வெளி மையத்துக்கு இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸையும் (Sunita Williams) மற்றும் ஒரு வீரரையும் அழைத்துச்சென்ற போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் (Boeing Starliner) விண்கலம் அவர்கள் இல்லாமலேயே இன்று பூமிக்கு திரும்புகிறது.

சர்வதேச விண்வெளி மையத்திற்கு, விண்வெளி வீரர்களை அழைத்து செல்லவும், அங்கிருப்பவர்களை பத்திரமாக பூமிக்கு அழைத்து வரவும் போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த விண்கலத்தில் சில தொழில்நுட்ப பிரச்சினைகள் ஏற்பட்டிருப்பதால், தாம் அழைத்துச் சென்றவர்கள் இல்லாமல், குறித்த விண்கலம் பூமிக்கு திரும்புகிறது.

முன்னதாக, பூமியிலிருந்து ஏறத்தாழ 400 கிலோ மீற்றர் உயரத்தில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கு விண்வெளி வீரர்களை அழைத்துச்சென்று, அழைத்து வரும் பணிகளை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவே (NASA) மேற்கொண்டு வந்தது.

பின்னர் இந்த பணிகளை தனியார் வசம் ஒப்படைக்க நாசா முடிவெடுத்தது. இதற்காக போயிங் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. போயிங் நிறுவனத்திற்கு விமான தயாரிப்பில் முன் அனுபவம் உண்டு என்ற அடிப்படையில்தான் அந்த நிறுவனத்தை நாசா தேர்ந்தெடுத்தது.

இதனடிப்படையில் போயிங் நிறுவனம் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்காவின் மற்றொரு விண்வெளி வீரரான புட்ச் வில்மோர் என இருவரையும் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அழைத்து சென்று, மீண்டும் பாதுகாப்பாக பூமிக்கு கொண்டு வரும் பணியை ஏற்றுக்கொண்டது.

இதற்காக ‘ஸ்டார் லைனர்’ எனும் விண்வெளிக்கப்பலையும்; “போயிங்” தயாரித்தது. இந்த விண்வெளிக்கப்பல் கடந்த ஜூன் 5ம் திகதியன்று விண்வெளி மையத்துக்கு புறப்பட்டு ஜூன் 7ஆம் திகதி அங்கு சென்றடைந்தது.

இதனையடுத்து அவர்கள் இருவரும் ஜூன் 14ம் திகதியன்று மீண்டும் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால், ஸ்டார் லைனரில் ஏற்பட்ட ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை என்பன இந்த பயணத்தை இன்று வரை தாமதப்படுத்தியுள்ளது.

சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து பூமிக்கு திரும்ப 6 மணி நேரங்கள் தேவைப்படும் நிலையில், இந்த பிரச்சினை இன்னும் சரி செய்யப்படவில்லை என்பதால், ஸ்டார்லைனர் விண்கலம் இன்று 6 ஆம் திகதி வெறுமையாக பூமிக்கு திரும்பவுள்ளாக நாசா அறிவித்துள்ளது.

அதேநேரம் எதிர்வரும் 2025ம் ஆண்டு, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் க்ரூ விண்கலம், சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்கிறது. அதில், சுனிதாவும், வில்மோரும் திரும்புவார்கள் என நாசா அறிவித்திருக்கிறது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...