tamilni 625 scaled
இலங்கைசெய்திகள்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..!

Share

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (28) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305 ரூபாய் 56 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 315 ரூபாய் 29 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 385 ரூபாய் 48 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 401 ரூபாய் 04 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 329 ரூபாய் 23 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 343 ரூபாய் 31 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 224 ரூபாய் 05 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 234 ரூபாய் 37 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்ரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 197 ரூபாய் 35 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 207 ரூபாய் 90 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 225 ரூபாய் 33 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 236 ரூபாய் 14 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.

அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 305.48 ரூபாயிலிருந்து 304.25 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 315.87 ரூபாயிலிருந்து 314.86 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 304.77 ரூபாயிலிருந்து 304.27 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 314.75 ரூபாயிலிருந்து 314.25 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.

சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே, 306.50 ரூபாயிலிருந்து 305.50 ரூபாய் மற்றும் 315.50 ரூபாயிலிருந்து 314.50 ரூபாயாக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Featuredvdfv
இலங்கை

ஆபத்தான ஆயுதங்களுடன் இரத்மலானையில் பலர் கைது!

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில்...

dead body 2
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

இன்றைய தினம், யாழ்ப்பாணம் – நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக...

bus bike accident
இலங்கை

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலியான வங்கி ஊழியர்!

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில்,...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை

உயர் அதிகாரிகளுக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்றங்கள்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ்...