2 11
இலங்கைசெய்திகள்

எந்த பதவியையும் ஏற்கப் போவதில்லை: அநுர தரப்பிலிருந்து எதிரொலித்த குரல்

Share

எந்த பதவியையும் ஏற்கப் போவதில்லை: அநுர தரப்பிலிருந்து எதிரொலித்த குரல்

புதிய நாடாளுமன்றத்திற்கு போட்டியிடப் போவதில்லை என்றும் அரசாங்கத்தில் எந்த பதவியையும் ஏற்கப் போவதில்லை என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா (Tilvin Silva) தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளராக தாம் இருப்பதால், கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஆதரவளிப்பதாக அவர் அங்கு தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் பதவிகளை வகிப்பது கட்சியின் அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய டில்வின் சில்வா, அரசியலில் ஈடுபட்டதன் பின்னர் இலங்கையின் பிரதமராக பதவியேற்கும் முதல் பெண் ஹரிணி அமரசூரிய ஆவார் என்றும் கல்வியுடனும் பரிபூரணத்துடனும் தனது பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக ஹரிணி அமரசூரியவை பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...