2 11
இலங்கைசெய்திகள்

எந்த பதவியையும் ஏற்கப் போவதில்லை: அநுர தரப்பிலிருந்து எதிரொலித்த குரல்

Share

எந்த பதவியையும் ஏற்கப் போவதில்லை: அநுர தரப்பிலிருந்து எதிரொலித்த குரல்

புதிய நாடாளுமன்றத்திற்கு போட்டியிடப் போவதில்லை என்றும் அரசாங்கத்தில் எந்த பதவியையும் ஏற்கப் போவதில்லை என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா (Tilvin Silva) தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளராக தாம் இருப்பதால், கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஆதரவளிப்பதாக அவர் அங்கு தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் பதவிகளை வகிப்பது கட்சியின் அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய டில்வின் சில்வா, அரசியலில் ஈடுபட்டதன் பின்னர் இலங்கையின் பிரதமராக பதவியேற்கும் முதல் பெண் ஹரிணி அமரசூரிய ஆவார் என்றும் கல்வியுடனும் பரிபூரணத்துடனும் தனது பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக ஹரிணி அமரசூரியவை பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...