17 20
இலங்கைசெய்திகள்

298 ஐஎஸ்ஐஎஸ் உறுப்பினர்களை கைது செய்த நாடு!

Share

ஐஎஸ்ஐஎஸ் என்ற இஸ்லாமிய அரசுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 298 பேரை துருக்கிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் இதனை நேற்று அறிவித்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாக, அங்காரா, இஸ்தான்புல் மற்றும் இஸ்மிர் உட்பட 47 மாகாணங்களில் இடம்பெற்ற நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேககத்துக்குரியவர்கள், ஐஎஸ்ஐஎஸ்_க்கு நிதியளித்தல் மற்றும் அதன் சார்பாக பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளல் உட்பட்ட தீவிரமான பணிகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த கைது நடவடிக்கைகளின் போது, பல உரிமம் பெறாத கைத்துப்பாக்கிகள் உட்பட்ட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

2013 ஆம் ஆண்டில் துருக்கியின் அரசு, அதிகாரப்பூர்வமாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை, ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...