tamilnaadi 5 scaled
இலங்கைசெய்திகள்

முச்சக்கரவண்டி கட்டணங்களும் அதிகரிப்பு

Share

ஜனவரி மாதம் முதல் முச்சக்கரவண்டி கட்டணங்கள் அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதம் முதல் வற் வரி அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் நிலையில், பெட்ரோலின் விலை அதிகரிக்குமாக இருந்தால் முச்சக்கரவண்டி கட்டணமும் அதிகரிக்கக்கூடும் என அந்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

நேற்றையதினம்(29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அந்த சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர இதனை குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கும் எரிபொருள் விலைக்கு ஏற்ப முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் அதிகரிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கடந்த காலங்களில் அரசாங்கம் பெட்ரோல் விலையை உயர்த்திய போது, ​​ முச்சக்கரவண்டி கட்டணங்களை உயர்த்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், ஆனால் வற் திருத்தத்துடன் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
05 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தனியார் பஸ் சேவைகளை முறைப்படுத்தக் கோரிக்கை: அத்தியாவசியமற்ற நேரங்களில் சேவைகளைக் குறைக்கத் திட்டம்

நாட்டில் நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு, தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், பயணிகள் வருகை குறைவாக...

02 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி சேமிப்பு நடவடிக்கை: ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு,...

01 16
செய்திகள்உலகம்

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு என தலிபான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400...

21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...