24 6658c87f2b64c
இலங்கைசெய்திகள்

தனியார் வகுப்பிற்கு சென்ற மூன்று மாணவர்களை காணவில்லை

Share

தனியார் வகுப்பிற்கு சென்ற மூன்று மாணவர்களை காணவில்லை

கம்பகா (Gampaha)யக்கல பிரதேசத்தில் தனியார் வகுப்பிற்குச் சென்ற 14 வயதுடைய மூன்று மாணவர்கள் நேற்று (29) மாலை முதல் காணாமல் போயுள்ளதாக யக்கல மற்றும் வீரகுல காவல்துறையினர் தெரிவித்தனர்.

யக்கல காவல்துறையினருக்கு இது தொடர்பில் ஒரு முறைப்பாடு கிடைத்ததுடன் மற்றைய இரண்டு முறைப்பாடுகள் வீரகுல காவல்துறைக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

மாணவர்களின் தாய்மார்களே இந்த முறைப்பாடுகளை செய்துள்ளதாக பிரதேசத்தின் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காணாமல் போன மூன்று மாணவர்களும் கம்பகா யக்கல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 9ஆம் ஆண்டில் கல்வி கற்கும் நண்பர்கள் எனவும், இவர்கள் மூவரும் நேற்று (29) இரவு வரை வீட்டுக்கு வரவில்லை எனவும் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி மேலும் தெரிவித்தார்.

காணாமற்போன மூன்று மாணவர்கள் தொடர்பில் இன்று (30) வரை எவ்வித தகவலும் தமக்கு கிடைக்கவில்லை என யக்கல மற்றும் வீரகுல காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான விசாரணைகளை யக்கல மற்றும் வீரகுல காவல் பிரிவின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகள் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...