13 17
இலங்கைசெய்திகள்

இலங்கை கடற்றொழிலாளர்கள் மூவர் தமிழ்நாட்டில் கைது.!

Share

இலங்கை கடற்றொழிலாளர்கள் மூவர் தமிழ்நாட்டில் கைது.!

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை கடற்கரையிலிருந்து கடலுக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் மூவர் எல்லை தாண்டிய குற்றத்திற்காக இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டத்தில் துண்டிகிராம கடலில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (17) மாலை 2.00 மணியளவில் இந்திய கடலோர காவல்படையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்புத்துறையை சேர்ந்த ஒருவரும் வடமராட்சி கிழக்கு பிரதேசம் உடுத்துறையை சேர்ந்த இருவரும் என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், நடுக்கடலில் கடற்றொழிலாளர்களிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காற்றின் வேகம் காரணமாக படகு திசை மாறி இந்திய கடற்பரப்புக்குள் வந்ததாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, அவர்களை மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...