மின்சார கட்டணத்தை செலுத்த 3 மாத கால அவகாசம் வழங்கும் வர்த்தமானி கட்டளை இன்றைய தினம் வெளியிடப்படவுள்ளது.
இது தொடரபில் கருத்து தெரிவித்துள்ள பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க,
தாமத கொடுப்பனவை 3 மாதங்களுக்குள் செலுத்ததவறும் மின் பாவனையாளர்களுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்படும்.
மேலும் அதிகளவில் மின்சாரத்தை பயன்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு தேசிய கட்டமைப்பிலிருந்து இவர்களுக்கு கிடைக்கும் மின்சார விநியோகத்தை துண்டிக்க உத்தரவிடப்பட்டடுள்ளது.
அவர்களிடம் காணப்படும் மின்பிறப்பாக்கிகளை பயன்படுத்தி மின்சாரத்தை பெற்றுக்கொள்வதற்கு அனுமதிக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. என்றார்.
#SrilankaNEws
Leave a comment