செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரயில் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி…!!

Share
440px Northern Line Sri Lanka December 2019 1
Share

இன்று முற்பகல் ஹட்டன் – வட்டவளை, ரொசல்ல ரயில் நிலையத்துக்கு அருகில் ரயில் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை , மகன் ஆகியோரே இவ்வாறு பலியாகியுள்ளனர் .

இன்று (08) முற்பகல் 11.55 மணியளவில் ரொசெல்ல புகையிரத நிலையத்திற்கு அருகில் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த உடரட மெனிகே ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ரயில் கடவையை கடக்க முயன்ற போதே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் இது தற்கொலையா , விபத்தா என்ற சந்தேகத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

 

.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...