ஹெரோயினுடன் மூவர் கைது!

202104050046437788 137 people arrested for alcoholism SECVPF

யாழ்ப்பாணத்தில் மோப்ப நாயின் உதவியால் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லியடி பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன் தமது பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட வேளை, கரணவாய், தும்பளை, குடவத்தை ஆகிய பகுதிகளை சேர்ந்த மூன்று இளைஞர்கள், 83 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 80 கிராம் கஞ்சா ஆகியவற்றுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்காக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

#SriLankaNews

Exit mobile version