9 14
அரசியல்இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு கோரி அச்சுறுத்தல்: ஆரம்பமாகும் விசாரணை

Share

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு கோரி அச்சுறுத்தல்: ஆரம்பமாகும் விசாரணை

தபால் மூல வாக்களிப்பின் போது தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்குமாறு பல அரச உத்தியோகத்தர்களை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடுகஸ்தோட்டை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவரே அவ்வாறு அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டின் பிரதானி சட்டத்தரணி திலின பெர்னாண்டோவினால் தேர்தல் ஆணையாளர் மற்றும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் (தேர்தல்கள்) ஆகியோரிடம் இது தொடர்பில் முறைப்பாடு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாக்குப்பதிவில் செல்வாக்கு செலுத்துவது தேர்தல் விதிகளை மீறும் செயல் என்பதால், சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த முறைப்பாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட
இலங்கை

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஹேமசிறி பெர்னாண்டோ.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை,...

Shooting 5
இலங்கை

சற்றுமுன் மிரிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிசூடு.

இன்றைய தினம், மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...

mnnnn
இலங்கை

தொழிலாளி மீது சரிந்து வீழ்ந்த மண்மேடு.

கண்டி, வில்லியம் கொபல்லவ மாவத்தையில் இன்று நண்பகல் 11.00 மணியளவில் வில்லியம் கொபல்லவ மாவத்தையிலுள்ள இடமொன்றில்...

sri lanka floo
இலங்கை

நாட்டில் மழை கிடைக்கவுள்ள பிரதேசங்கள் – வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால், அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு அமுலாகும் வகையில் விசேட வானிலை முன்னறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது....