9 14
அரசியல்இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு கோரி அச்சுறுத்தல்: ஆரம்பமாகும் விசாரணை

Share

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு கோரி அச்சுறுத்தல்: ஆரம்பமாகும் விசாரணை

தபால் மூல வாக்களிப்பின் போது தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்குமாறு பல அரச உத்தியோகத்தர்களை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடுகஸ்தோட்டை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவரே அவ்வாறு அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டின் பிரதானி சட்டத்தரணி திலின பெர்னாண்டோவினால் தேர்தல் ஆணையாளர் மற்றும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் (தேர்தல்கள்) ஆகியோரிடம் இது தொடர்பில் முறைப்பாடு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாக்குப்பதிவில் செல்வாக்கு செலுத்துவது தேர்தல் விதிகளை மீறும் செயல் என்பதால், சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த முறைப்பாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...