download 1 20
இலங்கைசெய்திகள்

ஆயிரக்கணக்கான வர்த்தகர்கள் கைது!

Share

ஆயிரக்கணக்கான வர்த்தகர்கள் கைது!

காலாவதியான பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்களை நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இதன்போது பண்டிகை காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் உணவு பொருட்கள் மற்றும் இனிப்பு வகைகளை விற்பனை செய்த 8,231 வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சில வர்த்தகர்கள் காலாவதியான கேக், பிஸ்கட் மற்றும் பிற பொருட்களை விற்பனை செய்துள்ளனர்.

இதேவேளை நாடு முழுவதும் 5,200 விசேட புலனாய்வு அதிகாரிகள், முட்டை வியாபாரிகள் உட்பட ஏனைய விற்பனையாளர்களை கைது செய்ய நுகர்வோர் விவகார அதிகாரசபையால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நிர்ணய விலையை விட அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்ததாக நாடு முழுவதும் 809 முட்டை விற்பனையாளர்கள் மற்றும் முட்டை உற்பத்தியாளர்கள் கைது செய்யப்பட்டு அவர்களில் 708 விற்பனையாளர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

#srilankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...