31 9
இலங்கைசெய்திகள்

தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பம் அனுப்பியவர்களுக்கான அறிவிப்பு

Share

தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பம் அனுப்பியவர்களுக்கான அறிவிப்பு

தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பம் அனுப்பி, அவை கிடைக்கப் பெறாதவர்களுக்கு விசேட கடிதம் ஒன்று வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக இந்த விசேட கடிதம் வழங்கப்படும் என ஆட்பதிவு திணைக்களத்தின் தென் மாகாண உதவி ஆணையாளர் எம்.எல்.ஏ. சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

ஒருநாள் சேவையின் ஊடாக தென் மாகாண காரியாலயத்தில் 300 தேசிய அடையாள அட்டைகள் நாள்தோறும் விநியோகிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

நாட்டின் எந்தவொரு பாகத்தில் வசிப்பவரும் இதற்காக விண்ணப்பம் அனுப்ப முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

சாதாரண சேவையின் ஊடாக வருடமொன்றுக்கு 40000 முதல் 45000 தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலப் பகுதியில் 26696 அடையாள அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

விண்ணப்பம் செய்த அனைவருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக தேசிய அடையாள அட்டைகளை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு வழங்கப்பட முடியாதவர்களுக்கு தேர்தலில வாக்களிப்பதற்காக விசேட கடிதமொன்று வழங்கப்பட உள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....