நிலாவரையில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட முயற்சிகளுக்குத் தடையாக அமைந்ததன் வாயிலாக தொல்லியல் திணைக்களத்தின் அரச கருமங்களுக்குத் தடை ஏற்படுத்தினார் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷுக்கு எதிராகத் தொடாரப்பட்ட வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த வருடம் தொடரப்பட்ட இந்த வழக்கில் வழக்கை முன்னொண்டு செல்வதாயின் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறுமாறு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மல்லாகம் நீதிவான் திருமதி காயத்திரி சைலவன் முன்னிலையில் வழக்குப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, அச்சுவேலி பொலிஸார் மேலதிக அறிக்கையைச் சமர்ப்பித்ததுடன் சட்டமா அதிபரின் ஆலோனைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் மன்றில் தெரியப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
#SriLankaNews
Leave a comment