1 e1648893777963
அரசியல்இலங்கைசெய்திகள்

சமூக ஊடகச் செயற்பாட்டாளர் திசர அனுருத்த பண்டார கைது!

Share

சமூக ஊடகச் செயற்பாட்டாளர் திசர அனுருத்த பண்டார கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவர் கொழும்பு, முகத்துவார பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கம்பளையைச் சேர்ந்த அவர், தண்டனைச் சட்டக் கோவையின் 120ஆம் இலக்க பிரிவின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அரசுக்கு எதிராக சூழ்ச்சி விளைவித்தமைக்காகவே திசர அனுருத்த பண்டார கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, சமூக ஊடகச் செயற்பாட்டாளரான திசர அனுருத்த பண்டார, சட்டத்தரணிகளின் உதவியைப் பெறுவதற்கு இடமளிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

இந்நிலையில், கொழும்பு 6ஆம் இலக்க நீதிவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...