2 7
இலங்கைசெய்திகள்

இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு துரோகம் செய்யாது

Share

தற்போதைய தேசிய மக்கள் மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு ஒரு போதும் துரோகம் இழைக்காது என அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது ஜெனீவாவில் நடைபெற்று வரும் மனித உரிமை பேரவை அமர்வுகள் தொடர்பில் தாங்கள் அலட்டிக் கொள்ளப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களுக்கு துரோகம் இழைக்க மாட்டோம் என்பது மக்களுக்கும் தெரியும் எனவும் அவர்கள் மீது அதிக கரிசனை கொண்டவர்கள் தேசிய மக்கள் சக்தி கட்சி என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும் எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முன்னேற்றுவது போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவது என்பனவற்றில் அரசாங்கம் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், காாணமல் போனவர்கள் தொடர்பான பிரச்சனைகள் குறித்தும் இந்த அரசாங்கம் தீர்வுகளை வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

செம்மணி புதைகுழி தொடர்பாக ஜனநாயக ரீதியாக பேசுவதற்கும் அவற்றை அகழ்வவதற்கும் இந்த அரசாங்கம் சந்தர்ப்பம் வழங்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.

அனைத்து பிரச்சினைகளுக்கும் நியாயமான தீர்வுகளை வழங்குவதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரச்சனைகளை உண்மையாக பேசுவது எமது அரசாங்கமே எமது அரசாங்கத்தில் வாய் பேச்சு வீரர்கள் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

மக்களின் பிரச்சனைகளை இதயங்களின் இருப்பாகக் கொண்டு தீர்வு வழங்க அரசாங்கம் முனைப்பு காட்டுவதாக அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...