18 19
இலங்கைசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் பலர் அரசாங்கத்துடன்..! தேரர் பகிரங்கம்

Share

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் அரசாங்கத்துடன் இருப்பதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இஸ்லாமிய கடும்போக்குவாத கொள்கையுடைய பலர் ஆளும் கட்சிக்குள் அடைக்கலம் புகுந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கத்தில் பிரதி அமைச்சராக கடமையாற்றி வரும் முனீர் முலாபர் இஸ்லாமிய கடும்போக்குவாதத்தை ஊக்குவிக்கும் நபர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நிட்டம்புவ பகுதியில் தன்வீர் அகடமியின் பொறுப்பாளராக முனீர் கடமையாற்றி வருவதாகவும், கடவுளுக்காக உயிர்த்தானம் செய்ய வேண்டுமென வலியுறுத்தும் குழுவொன்றை முனீர் வழிநடத்துவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தை விடவும் இந்த அரசாங்கம் இஸ்லாமிய கடும்போக்குவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் மெத்தனப் போக்கினை பின்பற்றுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தம்மை கல்லால் அடித்து கொலை செய்ய வேண்டுமென கிழக்கு மாகாணத்தில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்டாலும் அவர்களது கொள்கை ரீதியான போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

உலக அளவில் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்து வருவதாகவும், சிங்களவர்களுக்கு இருக்கும் ஒரே நாடு இந்த இலங்கை மட்டுமே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...